சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! அப்ரூவராக மாறும் காவலர்கள்..!!
சாத்தான்குளம் தந்தை மகன் மரணமடைந்த சம்பவத்தில் நேற்றைய தினம் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டதாக சிபிசிஐடி தெரிவித்ததை தொடர்ந்து களத்திலும் அதிரடி காட்டி வருகிறது. காவலர் முத்துராஜ் தவிர மற்றைய அனைவரும் கைது செய்யப் பட்டதாக ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ் ஐ ரகு கணேஷ், பாலகணேஷன், முருகன், ஆகியோர் தற்போது கைது செய்யப் பட்டுள்ள நிலையில் முத்துராஜ் கைது செய்யப் படவில்லை, இவர் அரச சாட்சியாக மாற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பொலீஸ் நிலையத்தில் இருந்த அத்தனை சிசிடிவி காட்சிகளும் நீக்கப் பட்டதால் காவல் நிலையத்தின் வீடியோக்கள் எடுப்பது கடினமான ஒன்றாகும்,
இருப்பினும் வீடியோக்களை மீண்டும் எடுப்பதற்கு வல்லுனர்கள் வந்துள்ளதால் அங்கு காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் வீடியோ மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும் என நம்பப் படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை, காவலர், மக்கள் ஆகியோரின் சாட்சிகள், மற்றும் ஜெயராஜின் கடையில் எடுத்த சிசிடிவி காட்சிகளின் படி பொலீஸாரின் FIR முற்றிலும் பொய்யானது என்பதால் அதனை மாற்றியமைக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது.
சிபிசிஐடியினர் இந்த வழக்கில் வேகமாக செயல் படுவதாகவும் இதனால் சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என நம்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்..!! சற்று முன்னர் கிடைத்த தகவல்..
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் பால்துரை சற்று முன்னர் அப்ரூவராகிறார். ஏற்கனவே மனசாட்சிக்கு துரோகம் செய்து பொய் சொல்லுவதை விட மரணம் வந்தாலும் நிம்மதியாக இருக்க முடியும் என கூறி காவலர் ரேவதி அப்ரூவராக மாறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது..!!