23 வயது, கர்ப்பிணி இளம் பெண்ணை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த இளைஞர்.! அதிர வைக்கும் சம்பவம்.!!
திருமணமாகி கர்ப்பாக இருக்கும் 23 வயது பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. 23 வயதான இவர் சில வருடங்களுக்கு முன்பு வில்லியம் ஜேம்ஸ் என்ற நபரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அதன் பின் செலினா வேறு நபரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயானதுடன் மூன்றாவதாக கர்ப்பமாக இருந்தார். இதனை. தொடர்ந்து சில நாட்களுக்கு முன் செலினா காணாமல் போனார், இதனை தொடர்ந்து பெற்றோர் எவ்வளவு தேடியும் செலினா கிடைக்கவில்லை,
இதனை தொடர்ந்து பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்தனர், செலினாவை தேடிய பொலீஸார் முன்னாள் காதலன் வில்லியமின் வீட்டை சோதனையிட்ட போது குளிர்சாதனப் பெட்டியில் செலினாவின் உடல் இருந்துள்ளது.
உடல் முழுவதும் காயங்களுடன் இருந்ததால் வில்லியம் செலினாவை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என நம்பப் படுகின்ற நிலையில் பொலீஸார் வில்லியம் ஜேம்ஸை பொலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.!