மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள்.
இன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்திற்கு சற்றுத் தொலைவில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலிலிருந்து ஒரு காப்டன் உட்பட 11 மாலுமிகள் கடற்படையினரால் அதிஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
அதிகாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 11.6 கடல்மைல் தொலைவில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான ‘Mutha Pioneer’ என்கின்ற டொமினிக்கன் நாட்டுக்கு கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலானது யாரும் எதிர்பாரா வகையில் திடீரென தன் கட்டுப் பாட்டை இழந்து கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது.
இலங்கை கடற்படையினருக்கு விடுக்கப்பட்ட உதவிக்கு கோரிக்கை சமிக்ஞையைத் தொடர்ந்து உடனடியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலிலிருந்து ஒரு இந்தோனேசியாரும் 10 இலங்கை மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
கப்பல்கள் மூழ்கிய வரலாறுகள் பலவற்றைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் எதுவும் இல்லாமல் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து கடற்படையினர் அனைவரையும் மீட்ட போதிலும் இந்தச் சம்பவமானது இன்னொரு மைக்ரோ டைட்டானிக் அச்சத்தையே உண்டுபண்ணுகின்றது.