சிங்கப்பூரில் இந்தோனேசியா ஆடவருக்கு சிறைத்தண்டனை..!! காரணம் என்ன தெரியுமா?
சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி தம்மிடம் கையூட்டு கேட்டதாக பொய் கூறிய 42 வயதுடைய இந்தோனேசியா ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சுற்றுப் பயண வழிகாட்டியான ஹேரி ரிஸ்டான்டோ (Harry Ristanto) 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றத்தை செய்தாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது.
மேலும் அவர் மலேசியச் சுற்றுப்பயண வழிகாட்டியும் சேந்து இந்தோனேசியா சுற்றுப்பயணிகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தனர். துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்கு உள்ளே நுழைய முயற்சி போது, இருவரும் அறையினுள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூத்த அதிகாரி ஒருவருடன் சிறிய பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் பேச்சுவார்த்தை முடிந்ததும் அந்த அதிகாரி தம்மிடமிருந்து 2000 வெள்ளி கையூட்டு கேட்டதாகவும் தாம் 1500 வெள்ளி தந்ததாகவும் ரிஸ்டான்டோ சுற்றுப்பயணிகளிடம் கூறினார்.
இது தொடர்பாக விசாரித்த போது அது முற்றிலும் பொய் என்று தெரிந்தும் ரிஸ்டான்டோ அவ்வாறு கூறியுள்ளதாக என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.