2ஆவது உலகப் போர்க்கால வெடிகுண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பிய ஜியாக் கிம் ஸ்ட்ரீட்..!
சிங்கப்பூரின் ஜியாக் கிம் ஸ்ட்ரீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2ஆவது உலகப் யுத்தக்கால வெடிகுண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த வட்டாரம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது. வெடிகுண்டு பாதுகாப்பாக எடுப்பதற்கு முன்பாக அந்த பகுதியிலிருந்த கூட்டுரிமை வீடுகளும் ஹோட்டல்களும் சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டனர். வெடிகுண்டு பாதுகாப்பாக எடுப்பதற்கு பொலிஸார் Facebook மூலம் தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் எடை கொண்ட அந்த வெடிகுண்டு நேற்றைய தினம் மாலை மணி 4.35க்குச் செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிகுண்டைச் சுற்றிலும் 200 மீட்டர் தொலைவுக்குப் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டது.