சிங்கப்பூரின் பாதுகாப்பு நிறுவனம் Certis இன் புதிய பல்கலைக்கழகம்..!!
சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை நிறுவனமான Certis, புதிதாக தனக்கு சொந்தமாக பல்கலைக்கழம் ஒன்றை அமைத்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கான ஊழியர் அணியை மின்னிலக்க யுகத்திற்குத் உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு, தகவல் பகுப்பாய்வு, மெய்நிகர் தொழில்நுட்பம் எனப் பல பயிற்சிகளைப் புதிய பல்கலைக்கழகத்தில் Certis கொடுக்கவுள்ளது. Certis நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 60 விழுக்காட்டு ஊழியர்கள் அதன் மூலம் பலன்பெறவுள்ளனர். விமானங்கள், கார்கள் எனப் பல்வகை வாகனங்களை மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனையிட இனி அவர்களால் முடியும்.
ஆசியாவிலேயே பாதுகாப்பு துறையில் கவனம் செலுத்தும் இந்த முதல் பல்கலைக்கழகத்தில், கடந்த வரும் மட்டும் 10 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டது. மெய்நிகர் தொழில்நுட்பத்தின் செயற்பாட்டினைமுன் 2 தினங்கள் தொடர்ந்த ஊழியர்களுக்கான பயிற்சி நேரம் தற்போது அரை நாளாக குறைக்கப்பட்டது. பயிற்சிகளை மேலும் வசதியாக்கும் நோக்கத்தில் செயலிகளும் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் குறித்த பயிற்சிகளின் வழி எதிர்வரும் மூன்று வருங்காலில் சுமார் 20,000 ஊழியர்கள் பயன் அடைவார்கள். இந்த புதிய பல்கலைக்கழகத்தின் மூலம், பயிற்சி பெற முன் வருகின்றவர்களுக்கு எண்ணிக்கை சுமார் 30 விழுக்காடு அதிகரிக்கும் என Certis நிறுவனம் கூறப்படுகிறது.