சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும்..!!
சிங்கப்பூரின் பல இடங்களில் இன்றைய தினம் பிற்பகல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 2:45 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் Twitter ஊடாக இதனை தெரிவித்துள்ளது. பலத்த மழை பெய்தால், சில பகுதிகளில் திடீர் வெள்ளம் கூட ஏற்படலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியுள்ளது. தற்போது பருவமழைக்காலம் என்பதால் கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.