எதிர்வரும் 2030 ஆம் வருடத்திற்குள் HIV, AIDS பரவலை ஒழிக்க ஒரு புதிய சமூகத் திட்டம் அறிமுகம்..!!!
சிங்கப்பூரில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு உள் HIV மற்றும் AIDS பரவலை ஒழிக்க ஒரு புதிய சமூகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகல் திட்டத்தின் தகவல்களை அரசு சாரா அமைப்பான Action for AIDS Singapore அமைப்பு அறிவித்துள்ளது. வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 60 நபர்களால் இந்த நகல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட்டதாக கூறப்பட்டது.
மேலும் இந்த ஒருங்கிணைந்த திட்டங்களால் சிங்கப்பூரில் HIV பரவலுக்கு எதிராகக் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியம் என்று அமைப்பு நம்பிக்கை கூறியுள்ளது. சிங்கப்பூரில் 2017 ஆம் ஆண்டு மட்டும் 434 பேருக்கு HIV தொற்றியதாகத் கூறப்பட்டது. சிங்கப்பூரில் 2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 7,982 பேர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.