சிங்கப்பூர் அனைத்துலக கடல்துறை அமைப்பின் 31ஆவது கூட்டத்தில் இணையவுள்ளது..!!
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும், உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. காவ் பூன் வான் லண்டனில் இடம்பெறவுள்ள அனைத்துலக கடல்துறை அமைப்பின் 31ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று முதல் இந்த மதம் 29ஆம் திகதி வரை அவர் லண்டனில் இருப்பார் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. உலக நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களும், கடல்துறை அதிகாரிகளும், கடல்துறைக் கொள்கை, விதிமுறை சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் அந்தக் கூட்டத்தில் இம்முறை அனைத்துலகக் கடல்துறை அமைப்பு மன்றத்தின் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பும் நடைபெறும். சிங்கப்பூர் மீண்டும் மன்றத்தில் உறுப்பினராகும் இணையவுள்ள வாய்ப்பை அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது. தமது பயணத்தின் போது திரு. காவ், அனைத்து உலகக் கடல்துறை அமைப்பின் தலைமைச் செயலாளரையும், மற்ற நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
போக்குவரத்துத் துறை எதிர்நோக்கும் விவகாரங்கள், அதன் மேம்பாடு போன்றவை தொடர்பாக தலைவர்கள் கலந்துரையாடுவார். போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் போன்றவற்றின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர் காவுடன் செல்வர் என்று அமைச்சு கூறியுள்ளது.