St James’ தேவாலய பாலர் பள்ளியில் பயிலும் இருவர் தனிமைப்படுத்தப்பட உத்தரவு..!!
சிங்கப்பூரில் St James’ தேவாலய பாலர் பள்ளியில் பயிலும்இரண்டு மாணவர்களை COVID-19 கிருமிப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதையடுத்து, பள்ளி, அதன் கில்ஸ்டிட் (Gilstead) வளாகத்தைச் சுத்தப்படுத்தி, கிருமி நீக்கம் செய்து வருகிறது.
குறித்த மாணவர்களில் இரண்டு பேரின் உறவினருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் குழந்தைகளுக்குத் தொடர்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் இருவரும், அவர்களின் பெற்றோரும் சீரான நிலையில் இருப்பதாகப் பாலர் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் குழந்தைகளுக்குத் தொடர்பு இருந்தது என்பது பற்றி அவர் அடையாளம் சொல்லவில்லை. சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்தால், இன்றைய தினம் பாலர் பள்ளி செயல்படத் ஆரம்பித்தது. கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக, St James’ தேவாலய பாலர் பள்ளி தெரிவித்துள்ளது.