சிங்கப்பூர் மனித உரிமை வழக்குரைஞர் மீண்டும் சட்டத் துறையில் சேர்ந்துள்ளார்…!!
சிங்கப்பூர் மனித உரிமை வழக்குரைஞர் திரு. M ரவி, சில வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சட்டத் துறையில் இணைந்துள்ளார். மேலும் இவர் வழக்குரைஞராகப் பணி புரிவதற்கான சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதில் இருந்து 2016 ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் அவர் செய்த குற்றங்களுக்கு, சிறைத்தண்டனைக்குப் பதிலாக 18 மாதக் கட்டாய சிகிச்சை பெற்றார்.
இவர் ஒரு வருட காலமாக மனநலப் பிரச்சினைகள் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறார் திரு ரவி. மருத்துவர்கள், நண்பர்கள், குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் அது சாத்தியமானது என்று TODAY இணையப்பக்கத்திடம் தெரிவித்தார். நான்கு வருடங்களுக்குப் பின்பு மீண்டும் நீதிமன்றத்திற்கு வழக்குரைஞராகச் செல்லவிருக்கிறார் திரு. ரவி.
வழக்குரைஞராகப் பணி புரிவதற்கு உரிய சான்றிதழைகள் சில நிபந்தனைகளோடு திரு. ரவி வழங்கப்படத்தை உச்ச நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்தார்.