நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்து..!!
ஸ்ரீலங்கா மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஒரு நம்பிக்கையை ஏனைய கட்சிகள் உருவாக்குமானால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்குத் நான் தயார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஒரு சில அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகிறது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற அனைத்து தரப்பினர்களும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தொடர்பான அனைத்து கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணி தொடங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த நிலையில் வடக்கில் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டை கேட்டோம் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.