மலேசியாவில் 2 வயது சிறுமிக்கு ரொட்டித் துண்டால் ஏற்பட்ட சோதனை…!!
மலேசியாவில் 02 வயதுடைய சிறுமிக்கு சாப்பிடும் போது தொண்டையில் ரொட்டித் துண்டு சிக்கி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் இந்த சிறுமி சிலாங்கூரிலுள்ள செலாயாங் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தார்.
அவர் அளித்த தகவல்படி குழந்தையின் பராமரிப்பாளரின் வீட்டில் சம்பவம் இடம்பெற்று இருக்கிறது.ரொட்டித் துண்டு சிக்கியதால் மூளைக்குப் போதிய அளவு உயிர்வாயுவும், ரத்தமும் சென்று சேராமல் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். என்றும் மருத்துவர் தெரிவித்தார். மலேசியச் சிறுவர் சட்டத்தின் கீழ் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளார்.