வெளி நாடு சென்று பின் நாடு திரும்பிய இளைஞனை வீதியிலேயே நசுக்கிப் போட்ட பேருந்து..! துடிக்கும் உறவுகள்..
மத்திய கிழக்கினில் பணிபுரிந்து நீண்ட நாட்களுக்குப்பின் தன் உறவுகளை பார்க்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கவலைக்கிடமான சம்பவம்.
நேற்று கொழும்பு- அக்கரைப்பற்று நோக்கிவந்த அரச பஸ்ஸினில் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி இஸ்தலத்தினில் மரணமடைந்துள்ளார்
இவர் வந்த பஸ் சாப்பாட்டுக்காக தம்புள்ளயிலுள்ள ஹோட்டலில் உணவருந்திவிட்டு புறப்பட தயாரான சந்தர்ப்பத்திலேயே இவர் பஸ்ஸினுள் ஏற எத்தணித்த சமயத்தில் பஸ்ஸிற்கும் வீதியோரமாக இருந்த மரத்திற்கும் இடையில் நசுக்குண்டு இஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.