கால்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கால்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுவதற்கு பயணிகளின் கணவக்குறைவே முக்கிய காரணம் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகாப்டரை இயக்கிய பைலட்டின் சகோதரர், Berge Zobayan நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களான பயணிகளின் முழு அலட்சியமே இன்று அனைவரும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது” என்று 7 பக்கங்கள் கொண்ட மனுவின் மூலம் தெரிவித்துள்ளார்
மேலும் இது தொடர்பாக பதிலளித்துள்ள கோபி பிரையன்ட் மனைவி Vanessa Bryant, எந்த பயணிகளும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று உணர்ந்து அதில் பயணிக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இது எப்படி பயணிக்கு நபர்கள் பொறுப்பாக முடியும். எதேனும் சேதங்கள் ஏற்படுத்தியிருந்தால் இவ்வாறு குறிப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
Berge Zobayan வழக்கறிஞர், அதற்கு எதிர் தரப்பு கருத்து தெரிவிக்க தகுதி இல்லை என்று வாதிட்டார்
மேலும், இந்த வழக்கில் Berge Zobayanக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி Vanessa Bryant தரப்பில், “பைலட் Ara Zobayan மற்றம் ஹெலிகாப்டர் நிறுவனம் Island Express ஆகியவை இந்த விபத்திற்கு காரணம்” என்று சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது