மலேசிய, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்களை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டது!
அமெரிக்க, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர். கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒருகட்டமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 118 பயணிகளும், அபுதாபியில் இருந்து 170 பயணிகளும் நேற்றைய தினம் இரவு 8.50 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தனர்.
பயணிகளின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. அதன் பின்னர் அவர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் துபாயில் இருந்து 178 பயணிகளுடன் வந்த விமானமும் ஹைதராபாத் வந்தடைந்தது. இதேபோல் கோலாலம்பூரில் இருந்த வந்த விமானங்கள் கொச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தரையிறங்கின.