இந்திய அணித் தலைவர் கோஹ்லி, முக்கியமான போட்டிகளின் போது வாழ்த்து தெரிவிப்பதை நிறுத்து வேண்டும் – கொந்தளிக்கும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லிமிக முக்கியமான போட்டிகளின் போது வாழ்த்து கூறுவதை முற்றாக நிறுத்துமாறு இணையத்தில் வைக்கப்பட்ட மனுவில், சுமார் 600-க்கும் மேற்பட்டோர் அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை எதிர்நோக்கியது. இதனால் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் கனவும் தகர்ந்தது.
இது போன்ற நிலையில் change.org என்ற இணையத்தில் Abhinay Thakur என்பவர் கோஹ்லி மற்றும் சேவாக் இருவரும், ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களில் குறிப்பாக அரையிறுதி மற்றும் இறுதியாட்டத்தின் போது வாழ்த்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும், அப்படி அவர்கள் அது குறித்து பதிவிட்டால் அது சமூகவலைத்தள பக்கம் அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறி, ஒரு மனு தொடங்கினர்.
அதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது வரை 758 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் குறிக்கோள் 1000 பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தான், தற்போது அது நெருங்கியுள்ளதால், கோஹ்லி மற்றும் சேவாக் வாழ்த்துக்கள் தெரிவிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. இருப்பினும் அவர்கள் அப்படி குறிப்பிட்ட போட்டிகளின் வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியா தோல்வியடைந்து விடுவதால், இது போன்ற மனுவை அந்த ரசிகர் அமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.