இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரருக்கு நிச்சயதார்த்தம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெயதேவ் உடன்கட்டுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்று முடிந்த 86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு(முதல் முறையாக முக்கிய காரணமாக இருந்த அணியின் தலைவர் உடன்கட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அப்போது போட்டிக்கு பின் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளேன். அந்த உத்வேகம் முன்பை விட இப்போது அதிகரித்துள்ளது என்று கூறியிருந்தார். மேலும் இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கூறி, வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவருடைய நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சவுராஷ்ட்டிரா அணி வீரரும், இந்திய அணியின் டெஸ்ட் வீரருமான சட்டீஸ் வர் புஜாரா சென்றுள்ளார். அதை புஜாரா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
There ain’t no records bigger than this, ain’t no moment better than this! ❤️ #RanjiChampions