2017 இல் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் – ரோகித் சர்மா
கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இரட்டைச் சதம் எடுக்கும் அரிய வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் என இந்திய நட்சத்திர துடுப்பாட்டகாரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தனது மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் உரையாடிய 33 வயதுடைய ரோகித் சர்மா, அன்றைய தினம் இரட்டைச் சத்தம் எடுக்கும் அரிய வாய்ப்பு இருந்தது. அதைத் தவற விட்டுவிட்டேன். நான் ஆட்டமிழந்த போது 9 ஓவர்கள் (7 ஓவர்கள்) மீதமிருந்தன. எனவே இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பு இருந்தது. பரவாயில்லை, 35 பந்துகளில் சதமடித்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தூரில் நடந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து ரோகித் சர்மா சாதனை படைத்தார். அதன் பின்னர் 13-வது ஓவரில் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.