பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல் குறித்து கல்வியமைச்சு விளக்கம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2ஆம் தவணைக்காக பாடசாலைகள் தொடங்கப்பட்ட் பின்னர் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல்களை கல்வியமைச்சு தயாரித்துள்ளது. குறித்த வழிக்காட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர், இந்த வழிக்காட்டல்கள் தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இருப்பினும் வழிக்காட்டல்கள் கிடைக்கும் வரை காத்திருக்காது, கைக்கழுவும் இடம், சுகவீனமான மாணவர்களை தங்க வைப்பதற்கான இடங்கள் என்பவற்றை தற்போதில் இருந்தே தயார்ப்படுத்துமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. குறித்த வழிக்காட்டல்களை நடைமுறைப்படுத்த தேவையான கிருமி தொற்று நீக்கி போன்ற திரவங்கள் பற்றிய மதிப்பீடுகள் இரண்டாம் தவணை தொடங்கிய பின்னர், பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படவுள்ளது. அந்த மதிப்பீடுகளுக்கு அமைய அத்திவசிய பொருட்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. யுனிசெப் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் அதற்கு அனுசரணை வழங்க முன்னரே முன்வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.