ஐசிசி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஒரு தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களிடம் உடல் வெப்ப நிலை பரிசோதனை, கொரோனா வைரஸ் பரிசோதனை முன்னெடுக்கப்படும். ஒவ்வொரு அணியிலும் தலைமை மருத்துவ அதிகாரி இருப்பார்.
அரசாங்கத்தின் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு இவர் பொறுப்பாவார். பயிற்சியின் போது வீரர்கள் இடையில் ஓய்வுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்களுக்கு வழங்க அனுமதியில்லை. அனைத்து வீரர்கள் மற்றும் நடுவர்கள் கிரிக்கெட் களத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.