மாஸ்கோவில் வங்கி ஒன்றில் 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மர்ம நபர்..!!
ரஸ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் வங்கி ஒன்றில் 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மர்ம நபரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.குறித்த நபர் வங்கியையும் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அந்த மர்ம நபர் மற்றுமொரு பகுதியில் இருந்து ஏன் இந்த வங்கிக்கு வந்து மிரட்டல் விடுத்தான் என்பது தொடர்பாக ரஷ்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமாவில் வருவது போல் வங்கி கதவை உடைத்து கொண்டு பொலிஸார் மிரட்டல் நபரை கைது செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.