சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்..!!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சினுக்கு கொடுக்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்ததை தொடர்ந்தும் அண்மையில் அரசாங்கக் குழு ஒரு கூட்டத்தை கூடியுள்ளது. அதில், சச்சின் மற்றும் ஆதித்யா தாக்கரே தவிர, 90 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பாரத ரத்னா விருது பெற்ற ஜாம்பவான் சச்சினுக்கு கொடுக்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
அதேவேலை3 ஒய் + பாதுகாப்பிலிருந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகனான 29 வயதுடைய ஆதித்ய தாக்கரேவுக்கு’இசட்’ பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, எக்ஸ் பிரிவின் கீழ் 46 வயதுடைய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு ஒரு பொலிஸார் உட்பட அவரை சுற்றிலும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அது அண்மையில் நீக்கப்பட்டாலும், அவர் தனது வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
என்சிபி தலைவர் ஷரத் பவார் தொடர்ந்து இசட் + பாதுகாப்பை அனுபவிப்பார். அதே போல அவரது மருமகனும் கட்சித் தலைவருமான அஜித் பவாருக்கு இசட் வகை பாதுகாப்பு தொடரும். உத்தரபிரதேசத்தின் முன்னாள் கவர்னர் ராம் நாயக்ஸ்க்கு கொடுக்கப்பட்டு வந்த இசட் + பாதுகாப்பு தரமிறக்கப்பட்டு, Y பாதுகாப்பு வழங்கப்படும். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரெஸ் பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ஒய் + ஆக மாற்றப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.