மரினா பே வட்டாரத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய நபர் கைது..!!!
மரினா பே வட்டாரத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய 32 வயதுடைய நபர் ஒருவரை விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அந்த நபர், இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் கூறும் நோக்கில், மரினா பே வட்டாரத்தில் கூட்டம் நடத்தும் செயற்பாடுகளில் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் நேற்றைய தினம் நடந்ததாகவும் அதைத் தொடர்ந்து நபர் விசாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. சிங்கப்பூரில் அனுமதியின்றி பொது இடங்களில் கூட்டம் நடத்துவது சட்டவிரோதமானது. மற்ற நாடுகளின் அரசியல் கொள்கைகள் தொடர்பான கூட்டங்களை நடத்தக் பொலிஸ் அனுமதி கொடுக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.