வெள்ளை வான் கடத்தலுக்கு முகம் கொடுத்த நபர்கள், முகம் கொடுத்த முறை, வெள்ளை வேன் கடத்தல் முன்னெடுக்கப்பட்ட முறை தொடர்பிலான தகவல்கள் என்னிடம் உள்ளது – சரத் பொன்சேகா
கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் வெள்ளை வான் கலாச்சாரம் அதிகம் அடைந்திருந்ததை தான் நன்கு அறிந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான் கடத்தலுக்கு முகம் கொடுத்த நபர்கள், முகம் கொடுத்த முறை, வெள்ளை வேன் கடத்தல் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான் கலாச்சாரம் தொடர்பான விழிப்புணர்வு உள்ள நான் அதன் விளைவுகள் தொடர்பாக நன்கு அறிந்துள்ளதாக பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெள்ளை வான் சாரதிகள் இருவருடன் ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிந்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே அது தொடர்பில் தனக்கு கருத்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.