இலங்கையில் மீண்டும் வெளிவரும் யுத்தத்தில் சரணடைந்தோர் பற்றிய விவகாரம்
கொழும்பில் நேற்று (13.09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இலங்கையின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினைவர் அணியின் நாடாளுமன்னற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க கூறிய கருத்து மீண்டும் சரணடைந்தோர் விவகாரத்தில் புதிய தகவல்களை வழங்குவதாக அமைகின்றது.
இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கேணல் ரமேஸ் படையினரிடம் சரணடைந்ததாகவும் பின்னர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெறிவந்திருந்தன. பின்னர் சனல்4 தொலைக்காட்சியும் அவ்வாறான ஒர் காட்சியை வெளியிட்டிருந்ததுடன் அது வடிவமைக்கப்பட்ட காட்சியென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்திருந்தார்.
இந்நிலையில் இறுதிக்கட்டப் போரில் சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டதை தாமும் அறிந்ததாகவும் தளபதி ரமேஸ் சரணடைவதற்கு சற்று நேரத்தின் முன்னர் தம்மோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார் எஸ்.பி.திசநாயக்க. இவர் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவரது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”