சத்திரசிகிச்சை மேற்கொண்ட பிரபல வைத்தியர் மொஹமட் ஷாபி வழக்கில் 68 தாதிகள் கூறியது என்ன தெரியுமா ??
பிரபல வைத்தியர் மொஹமட் ஷாபி சத்திரசிகிச்சையின் போது பெண்களுக்கு கருத்தடை செய்யவில்லை அதை நாங்கள் ஒரு போதும் கண்டதும் இல்லை என அவருடன் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட தாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் 4000 பெளத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்துள்ள குற்றசாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரபல வைத்தியருடன் தொழில் மேற்கொண்ட 69 தாதிகள் விசாரணையின் போது இதையே குறிப்பிட்டுள்ளனர்.
69 தாதிகளில் ஒரு தாதியிடம் மாத்திரம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை ஏன் எனில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவலை குற்றபுலனாய்வு திணைக்களம் வெளியிடவில்லை.