மலாக்காவில் இருந்து பார்சிலோனா புறப்பட்ட விமானம் அவசர அவசரமாக திடீரென தரையிறக்கம்..!!! காரணம் என்ன தெரியுமா???
ஸ்பெயினின் மலாக்காவில் இருந்து பார்சிலோனா புறப்பட்ட வியூலிங் விமானத்துக்குள் புகை வந்ததை தொடர்ந்து இந்த விமானம் அவசர அவசரமாக திடீரென தரையிறங்கியுள்ளது.
கடந்த வாரம் நள்ளிரவில், வியூலிங் VY2118 என்ற விமானம் மலாகாவில் இருந்து பார்சிலோனா புறப்பட்டது. பார்சிலோனாவில் எல் பிராட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னர் விமானத்துக்குள் திடீரென கரும்புகை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பயணிகள் பயந்து போயுள்ளனர். அந்த வேளையில் விமானக்குழுவினர் பயணிகளிடம் உங்களது மூக்கை கையால் மூடிக்கொண்டு தலையை தாழ்த்தி அமருமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததும் அந்த விமானத்துக்கு முன்னுரிமை கொடுத்து தரையிறக்கப்பட்டது. இருப்பினும், விமான நிலைய தரப்பிலோ, வியூலிங் விமான நிறுவனத்தரப்பிலோ யாரும் உதவ முன்வரவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரியான் ஏர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இருவர் அங்கு பயணிகளாக வந்ததாகவும், அவர்களும், சக பயணிகளும் உதவியதை அடுத்து பக்கவாட்டு பாதுகாப்பு சறுக்கல் உதவியுடன் அவசர அவசரமாக தரையிறங்கியதாகவும் குறிப்பிட்டனர்.
குறித்த விமானத்தில் முன்பக்க இடதுபுற பக்கவாட்டு பாதுகாப்பு சறுக்கல் காற்றில் பறப்பதும் அதன் வழியே வெளியேற யாரும் முன் வராததால், பின்புறம் வழியாகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகள் சறுக்கி வந்து உயிர் தப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.