பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்..!!
இலங்கையில் சில வாரங்களில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருவலகஸ்வெவ பகுதியை நோக்கி சென்ற பஸ்மீது இனம் தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்கான 4 பேர் தப்போவ மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஆணமடுவ பிரதேசத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர் கருவலகஸ்வெவ பகுதியை நோக்கி பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் அந்த பஸ் வண்டியை மறித்த பெண்கள் உட்பட 20 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து இந்த தாக்குதலால் பஸ் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதே சமயத்தில் இந்த தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் 100 க்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன மற்றும் சனத் நிசாந்த உள்ளிட்டோர் தலையிட்டு மக்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கு உள்ளன பெரமுனவின் ஆதரவாளர்களை ஐ. தே. கட்சியின் ஆதரவாளர்களே தாக்கியதாக பெரமுனவின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.