உண்மையை ஒத்துக்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்..!!
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் உண்மையை ஒத்துக்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.
இந்த பல்கலைக்கழகம் இலங்கையில் எவ்விடத்திலையும் சட்டரீதியாக பதிவு செய்யப்படவில்லை என ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.அதோடு மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்க பல்கலைக்கழகம் இல்லை அது ஒரு தனியார் பல்கலைக்கழகம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் வாக்கு மூலத்தின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பதிவு செய்யப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுக்கு அமைய ஹிஸ்புல்லாஹ்விடம் விசாரணை இடம்பெற்றது.எனினும் இவரிடம் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல விசாரணை இடம்பெற்றது இறுதியில் உண்மை வெளிவந்தது என தெரிவிக்கப்படுகிறது.