கோப் குழு உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நியமிப்பு..!!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் (கோப்) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இன்றைய தினம் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கோப் குழுவின் கூட்டத்தின் போது அதன் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
கோப் குழுவின் உறுப்பினர்கள் விபரம் வருமாறு,
ரஞ்சன் ராமநாயக்க, அசோக அபேசிங்க, சுனில் ஹந்துன்நெத்தி, மாவை. சேனாதிராஜா, டி.வி. சானக்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, சுனில் பிரேமஜயந்த, மகிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ஜயந்த சமரவீர, மொஹான் பிரியதர்ஷன சில்வா, ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ச, ஹர்ச டி சில்வா, அஜித் பீ. பெரேரா, ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர்கள் இந்த கோப் குழுவின் உறுப்பினர்களாவர்.