இலங்கை மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…!!!
இலங்கையில் தொழுநோய் பரவும் அபாயம் அதிகரிப்பதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு தகுந்த பதிவுகள், மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக கம்பாஹா மாவட்டத்தின் தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி கிருஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் 54 நோயாளிகளும் , வத்தளையில் 29 பேரும், கட்டானவில் 23 பேரும், ஜா-எலவில் 23 பேரும் , களனியில் 21 பேரும், திவுலபிட்டியவில் 14 பேரும், கம்பாஹா 14 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
கம்பாஹா மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்ற மொத்த தொழுநோயாளிகளில் 273 பேர் என்றும், அவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் 79 பேர் அடங்கியுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொழுநோய் தொற்றக்கூடியது என்பதால், நோய் தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து சமூகத்தில் 90% ஆனவர்கள் இயற்கையாகவே தொழுநோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாகவும், இந்த நோய் தொற்று நோயாக இருந்தாலும், விரைவில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரவக்கூடிய அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த நோய் தொடர்பாக எதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி தகுந்த சிகிச்சையை பெற்று கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஒரு நபருக்கு தொழுநோய் ஏற்பட்டால் ஆறு மாதங்களுக்குள் அது பல பேருக்கு பரவி விடும். அதற்குள் சரியான சிகிச்சை எடுத்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.