ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹில்மிக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த அதிரடித் தீர்ப்பு..!!
ஏறாவூர் பிரதேச செயலாளராக பணிபுரியும் சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பாத்திரம் ஒன்றை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் படி மனித கொலைகுற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளிக்கு பத்து ஆண்டு கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் வழங்குமாறு தெரிவித்தார். மேலும் அவர் செலுத்த தவறும் பட்ஷத்தில் என்னும் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தவிட்டார்.
மேலும் நீதிபதி இளஞ்செழியன் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு கூறி அதனை செலுத்த விட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனையை வழங்குமாறும் உத்தரவிட்டார். மேலும் சதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த பெண்ணும் அதே அலுவலகத்தில் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும் இதன் போது வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் மரணம் ஏற்ப்பட்ட்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.