இலங்கை அதிபரின் திடீர் தீர்மானம்..!!
சிறிலங்கா சுதந்திர கட்சி செயற்படுத்தும் தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் தீர்மானம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கை அதிபர்
மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதே வேளையில் நாட்டில் சுதந்திரத்தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக இலங்கை அதிபர் கூறியுள்ளார். அதற்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நாட்டை நல்ல முறையில் நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் இதனை நீக்கினால் மட்டுமே நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் 2020 ஆம் ஆண்டு சுதந்திரமாக அமையும் எனறும் இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.