இலங்கை தொடருந்து பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!!
இலங்கை தொடருந்து பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர். மேலும் அமைச்சரவை அனுமதி கிடைத்த போதும், எங்கள் பிரச்சினைகளை தீர்க்க நிதி அமைச்சு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாராந்தம் தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 21ம் திகதி முதல் தொடர்ந்து பணியாளர்கள் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தை நடத்தினார்கள். இதன்போது போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் அவர்கள் கலந்துரையாடல் நடத்திய போது அது தோல்வி முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படும் போராட்டம் நாளை நள்ளிரவு வரையில் தொடரும் என்று, தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடருந்து சேவை அவசியமான சேவையாக கருதி பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த வர்த்தகமானி ஜனாதிபதியின் கையொப்பம் பெறுவதற்காக தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தொடருந்து சேவை துறைசார்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற பணியாளர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.