இலங்கை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!
இலங்கையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என பொய்யான தகவல் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்றில் 24 மணித்தியாலங்களிலும் விரும்பிய முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவித்தது. குறித்த வர்த்தக நிலைய இணையத்திற்கு சமமான இணையத்தளம் ஒன்று உருவாக்கி, அதில் இருந்து வட்ஸ்அப் ஊடாக தகவல் பெற்றுக்கொள்ளலாம். அந்த தகவலை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இணைய தொலைபேசி அழைப்பு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த தொலைபேசி அழைப்பினை பெற்றால் குறித்த நபரின் தொலைபேசியில் இருக்கும் அனைத்து பணம் உடனடியாக இல்லாமல் போய்விடும். அதுவே மாத கட்டணம் செலுத்தும் தொலைபேசி இணைப்பாளர் என்றால் மாத பட்டியலில் பாரிய தொகை ஒன்று செலுத்துமாறு மாத இறுதி பட்டியல் சேர்க்கப்படுகின்றது.
இலங்கை தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இந்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குறும்தகவல் வந்தாலும் அதனை கிளிக் செய்து பார்வையிட வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு பொய்யான தகவல்களை கேட்டு ஏமாறவேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, பொது மக்களிடம் தெரிவித்துள்ளது.