இலங்கை பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான அபிவிருத்தி நடவடிக்கை..!!
இலங்கை பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பாக பேசிய அவர் இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீன மயப்படுத்தப்படும் எனவும் இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5ம் திகதி தொடங்கவுள்ளது என்றும் கூறினார். இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் நிறைவடைவதுடன் பலாலி விமான நிலையம் சிவில் விமான நிலையமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 15 விமான நிலையங்கள் உள்ளது. இதில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடுகளில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆசிய நாடுகள் மத்தியில் 06வது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. விமான நிலையங்களில் நவீன விஷேட பாதுகாப்பு பொருட்களை செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளது.