பாலூட்டியபடி ரேம்ப் வோக்கில் கலந்துகொண்ட நீச்சலுடை அழகி!
பாலூட்டியபடி ரேம்ப் வோக் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார் நீச்சல் உடை அழகி மாரா மார்டின். ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் நடந்து வரும் போது பசியில் அழுத குழந்தைக்கு பாலூட்டிய படியே தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார் மாரா. பாலூட்டிய படியே ரேம்ப் வாக்கையும் அவர் முடித்தார்.
இதனால் அனைத்து ஊடகங்களும் அவருடைய இந்த தாய்மையின் உன்னதத்தை புகழ்ந்துள்ளனர். அத்தோடு இந்தச் சம்பவமானது அழகி மாராவுக்கு பெரும் புகழையும் சிறப்பையும் தேடிக்கொடுத்துள்ளது.
அவர் இது பற்றி கூறும்போத “என்னை குறித்து பிறர் அறிந்துக்கொல்வார்களா என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், இப்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. பல ஊடகங்களில் நான் தலைப்பு செய்தியாகி இருக்கிறேன். அதுவும் எனது மகளுடன். அவளுக்கு நான் நாள்தோறும் செய்துவரும் கடமைக்காக” என்று பெருமிதமாக கூறியுள்ளார் மாரா.