பிரதமர் நியமனம் சட்டபூர்வமானதே – ஜி.எல்.பீரிஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்புக்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் பிரதமர் நியமனம் அரசியல் யாப்புக்கு முரணானது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந் நியமனமானது சட்ட பூர்வமானது எனத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் 46(2) ஆம் சரத்து இலங்கை பிரதமர் ஒருவர் பதவி விலகக்கூடிய சந்தர்ப்பங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அதன்படி அமைச்சரவை செயலிழக்கும்போது பிரதமர் பதவி இழந்ததாகவே கொள்ளப்படும்.
பொதுஜன ஐக்கிய முன்னணி நேற்று அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ரணில் பிரதமராக இருப்பதற்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”