தொண்டை வலி, தொண்டை புண், தொண்டை செருமலுக்கு உடனடி நிவாரணி..இதோ உங்களுக்காக…
காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட நம் தொண்டையில் செருமல் ஏற்பட்டு பேசமுடியாமல் திணறிக் கொண்டு எல்லோர் மீதும் எரிந்து விழுந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள் உண்மையில் கொடுமையான கணங்களே. இந்த தொண்டைப் புண் மற்றும் தொண்டைச் செருமல் ஆகியன உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்து வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றிற்கு உள்ளாவதால் ஏற்படுகின்றன.
இந்த தொண்டைச் செருமலை் மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்து உங்கள் குரலை உங்களுக்கு மீட்டுத் தருவதற்கு என்னென்ன பானங்களை பருகவேண்டுமென்று பார்க்கலாம் வாங்க.மஞ்சள் தூள் கலந்த பால். மஞ்சள் என்பது இயற்கையாகவே வைரஸ் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கிய மருத்துவ குணம் கொண்டது. அத்தகைய மஞ்சளை கொதிக்க வைத்த பாலில் அரைத் தேக்கரண்டி கலந்து பருகினால் தொண்டையில் ஏற்பட்டுள்ள வைரஸ் பிரச்சினைகள் உடனே தீர்ந்துவிடும்.
இஞ்சி-இலவங்கப்பட்டை கலந்த அதிமதுர தேநீர்இஞ்சி-இலவங்கப்பட்டை மற்றும் அதிமதுரம் ஆகிய மூன்று ஆயுர்வேத மூலிகைகளினால் ஆன தேநீரைப் பருகுவதன் மூலம் தொண்டைச் செருமலை உடனடியாக விரட்டிவிட முடியும்.இஞ்சித் தேநீர் இஞ்சியில் இயற்கையாகவே பக்டீரியா எதிர்ப்பு சக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியன நிறைந்துள்ளது. சாதரணமாக பருகுகின்ற தேநீரில் இஞ்சித் துண்டுகளை சாறாக்கி கலந்து குடித்தால் தொண்டைப் புண் மட்டுமல்ல தலையிடியும் பறந்துவிடும்.
துளசி இலை மற்றும் எலுமிச்சை கலந்த குடிநீர் துளசி என்பது ஆயுர்வேத மூலிகைகளில் மகத்துவம் வாய்ந்தது துளசி, கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை எலுமில்சை சாற்றுடன் தீர்ந்து கலந்து வடிகட்டி குடிப்பதன் மூலமும் தொண்டைப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
கொத்தமல்லி தேநீர் மெல்லித் தண்ணீர் / மல்லித் தண்ணீர் என்று அறியப்படுகின்ற இந்த கொத்தமல்லியை தண்ணீரில் வேகவைத்துப் பெறப்படுகின்ற குடிநீரானது கிருமித் தொற்றுக்களுக்கு எதிராகப் போராடும் வல்லமை வாய்ந்தது. இந்த குடிநீரை குடிப்பதன் மூலம் தொண்டைச் செருமலை உடனடியாக விரட்டியடிக்க முடியும்.