இன்றைய ராசி பலன்! 27 .09.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
27.09.2019 புரட்டாதி மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். சதுர்த்தசி பின் இரவு 3.05 வரை பூரம் பின் இரவு 1.00 வரையாகும். சுப நேரம் காலை 6.02 – 7.32 வரையாகும். எமகண்டம் மதியம் 3.02 – 4.32 வரையாகும். இராகுகாலம் காலை 10.32 – 12.02 வரையாகும். குளிகன் இரவு 7.32 – 9.02 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதிய சொத்து வாங்குவீங்கள். மகளுக்கு நல்ல வரன் வரும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: நீங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய வீடு வாங்குவீங்கள். குடும்பத்தை நல்ல ஒரு பாதையில் வழிநடத்த முடியும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்சினைகள் வரக்கூடும். குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள்அமோகமான நாளாகும்.
துலாராசி உறவுகளே: நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மற்றவர்கள் உங்களை மதிக்கும் படி நடந்துகொள்வீர்கள். பண தேவை அதிகரிக்கும். தம்பதியினக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். குடும்பத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிடிவாதப் போக்கை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். திடீர் வெளியூர் பயணம் கிடைக்கும். இன்றைய நாள் சவால்களில் வெற்றி பெறும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். முன் கோபத்தை தவிர்க்கவும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். முக்கிய காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். இன்றைய நாள் வளைந்துக் கொடுக்க வேண்டிய நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்கள் வகையில் சில உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி அடையும் நாளாகும்.