கணவரால் கொல்லப் பட்ட அப்பாவி பெண்..! திருமணமான 2வது நாளில் இருந்தே நடந்த கொடுமை..!!
வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதல் திருமணங்களை விட பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களிலேயே இந்த கொடுமைகள் அதிகம் உள்ளதால் தான் இன்றைய இளைஞர் யுவதிகள் பலர் காதல் திருமணத்தை விரும்புகின்றனர். ஓடிசா மாநிலத்தில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு ஜெமினி ஜெனா என்ற இளைஞருக்கும் வந்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் வந்தனா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணத்திற்கான காரணம் வெளிவராத நிலையில் வந்தனாவை அவரது கணவரும் மாமனார் மாமியாருக் கொலை செய்துவிட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருமணமாகி இரண்டாவது நாளே வரதட்சணை போதாது என வந்தனாவிடம் ஜெனா சண்டை இட்டுள்ளார்.
வந்தானவின் பெற்றோரின் தலையீட்டால் சமாதானமாகிய ஜென தொடர்ந்தும் தொல்லை செய்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று வந்தனாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்படதாக ஜெனா வந்தானாவின் பெற்றோருக்கு கூறியுள்ளார்.
சில மணி நேரத்தில் இறந்துவிட்டார் என கூறினார். சடலத்தை பார்த்த போது அதிர்ந்து போனோம், மகளின் கழுத்தில் நெரித்த அடையாளம் உள்ளது, கொலை செய்துள்ளனர் என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெனா கைது செய்யப் பட்டுள்ளார். தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது…!!