அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் மனைவி கண் முன்னே உயிரிழந்தார்..!!
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவுக்கு வந்த நபரொருவர் திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் நேற்றிரவு குறித்த நபர் தனது மனைவியுடன் நடமாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திடீர் என்று மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரின் மனைவி நிலாவெளி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நிலாவெளி பிரதேச மருத்துவமனையில் உயிரிழந்த நபர் அவுஸ்திரேலியா தஸ்மினியா நகரைச் சேர்ந்த 67 வயதுடைய ரொடோல் யோன் லெஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரது சடலமானது தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பிரேத பரிசோதனையின் பின் மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குச்சவெளி பொலிஸார் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா நாட்டுக்கு கணவரின் சடலத்தை கொண்டு செல்ல தூதரகத்தின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், திடீர் மரணம் தொடர்பில் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.