மே 19 இலங்கையின் போர் வெற்றி தினத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை..!!
இலங்கையில் இன்றைய தினம் அதாவது மே 19ம் திகதி போர் வெற்றி தினமாக அறிவிக்கப் பட்டு இலங்கை அரசால் கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழர்களின் தலைவராக கொண்டாடப் படும் வே. பிரபாகரன் அவர்களை கொன்று ஈழத்தை வெற்றி பெற்ற இராணுவ வீரர்களை போற்றுவதற்காகவே அவர்கள் இன்றையநாளை கொண்டாடுகின்றனர்.
நேற்றைய தினம் இலங்கை அரசால் கொன்று குவிக்கப் பட்ட அப்பாவி மக்களுக்கு அரசின் தடையை மீறி நினைவேந்தல் அனுஷ்டிக்கப் பட்டது. இந்த நிலையில் பல நாட்டு தலைவர்கள் நேற்றைய தினம் மக்களுக்கு ஆறுதல் கூறி இருந்ததுடன் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதன் போது கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி பெற்று இன்றைய தினம் 11 ம் ஆண்டினை கொண்டாடும் அரசுக்கு யுத்தத்தை வெற்றி பெற்றமைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கின்றேன்” யுத்தத்தை வெற்றி பெற்ற பின் அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும், போர் வெற்றியின் பின்னான காலம் என்பது பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிகவும் கொடுமையானதாகும்,
என தெரிவித்துள்ளார். அத்துடன் மீடியாக்களிடம் பேசியுள்ள இவர் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பலரை சந்தித்திருக்கின்றேன், பல கனேடியர்கள் இருக்கின்றனர், அவர்கள் அனுபவித்த வேதனை, பிரியமானவர்களை பிரிந்த கொடுமைகள் பற்றி கூறி இருக்கின்றனர். அரசு இவற்றை கவனத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்..!!