உடல் எடையை அதிகரிக்கும் கெட்ட கொழுப்பு வேகமாக கரைய வேண்டுமா.? ஒரு முறை இதை செய்து பாருங்கள்..!!
உடல் எடையை குறைக்க பலரும் ஆசை படுவது வழக்கம் தான். அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்..எப்படா எடையை குறைப்போம் என தவிப்பார்கள். உடல் எடை கூடிவிட்டால் தொப்பை, தொடைகளில் அதிக படியான சதை என அசைய முடியாமல் ஆக்கிவிடும்.
இதற்கு அதிக தீர்வுகள் இருக்கிறது. இன்றும் ஒரு சூப்பரான டிப்ஸ் பார்க்கலாம். இதற்கு எமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படுகிறது. ஒன்று சீரகம். அடுத்து பட்டை . முதலில் சீரகம் மற்றும் பட்டையை தனித் தனியாக அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
காலை எழுந்ததும் ஒரு கப் வெது வெதுப்பான நீரில் சீரகத் தூளில் அரை கரண்டி பட்டைத் தூளில் அரை கரண்டி சேர்த்து நன்றாக நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பின்பு அதனை வெறும் வயிற்றில் குடியுங்கள். குடித்த பின் ஒரு 30 நிமிடங்கள் ஏதேனும் சிறிய உடற்பயிற்சி ஒன்றை செய்யுங்கள்.
அப்படி செய்துவர தொப்பை சீக்கிரமே குறந்துவிடும். இந்த தண்ணீரை கண்டிப்பாக வெதுவெதுப்பான சூட்டில் தான் குடிக்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பும் குடித்துவிட்டு தூங்கலாம். இது பாலூட்டும் தாய்மார்கள். கர்ப்பிணி பெண்கள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தவிர்த்து மற்றவர்கள் பயன்படுத்தலாம்.!