பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் சேவைத் தடை நீக்கம்..!!
பேஸ்புக் நிறுவனம், அதன் செயலிகளிலும், தளங்களிலும் தகவலைகளை பகிர்ந்து கொள்ளும் சேவைகளில் ஏற்பட்ட தடை, நீக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உட்பட சில தளங்களில், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவைகளில் தடை ஏற்பட்டிருந்தது. மேலும் உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சேவை தடையால் அனைத்து பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இன்ஸ்டாகிராமின் பிரச்சினை ஏற்படுவதாக சுமார் 14,000 பாவனையாளர்கள் புகார் செய்துள்ளனர். Facebookகில் தகவல் பகிர்ந்துகொள்வதில் தடையை எதிர்நோக்குவதாகக் கிட்டத்தட்ட 7,500 பாவனையாளர்கள் தெரிவித்தனர்.
வழமை போல மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியால், சேவைகளில் தடைப்பட்டதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த சேவை தடையால் அதிருப்தி அடைந்த பாவனையாளர்கள் Twitter-இல் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.