முதலிரவு அறையில் அழகிய மனைவி கணவனுக்கு கொடுத்த ஷாக்.! வலியால் துடித்து மயங்கி விழுந்த கணவர்.!!
ஆசையோடு முதலிரவு அறையில் காத்திருந்த மணமகன் சில நிமிடத்தில் கதறி துடித்து மயங்கிவிழுந்த சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உ.பி யை சேர்ந்த 34 வயது நபர் ஒருவருக்கு 25 வயதான பெண் ஒருவரை திருமண புரோக்கர் மூலம் பெற்றோர் நிச்சயம் செய்தனர்..
குறித்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை என்றும் அண்ணன் அண்ணியருடன் வாழ்ந்து வருவதாக மணமகனின் பெற்றோருக்கு திருமண புரோக்கர் கூறியதை தொடர்ந்து குறைந்த வரதட்சணையுடன் திருமணம் செய்தனர். பெண் மிகவும் அழகியாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு பரம்பரை நகைகளை போட்டு அலங்காரம் செய்துள்ளனர்.
அத்துடன் வழமை போல் முதலிரவு அறைக்கு பால் உடன் மணப் பெண் அனுப்பப் பட்டுள்ளார். மணமகள் அழகில் மயங்கிப் போய் இருந்த மணமகன் மணப்பெண்ணை நெருங்கிய போது ஏற்கனவே அறையில் வைக்கப் பட்டிருந்த கட்டையால் மணமகனின் தலையில் தாக்கியுள்ளார்..மணமகன் நிதானிக்க முடியாமல் தாக்கியதால் நினைவிழந்து விழுந்துள்ளார்.
அதன் பின் அங்கிருந்த நகைகள், 2 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மணமகன் கத்தியதில் அனைவரும் அதிர்ந்து போய் பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். திருமண புரோக்கர் மற்றும் மணப்பெண் தலைமறைவாகி உள்ள நிலையில் பொலீஸார் தேடி வருகின்றனர்.?!