ஈ, கொசு கிருமிகளால் அவஸ்தையால் இதில் சிறிதளவு பயன்படுத்துங்கள் போதும்.. ! தீயசக்திகளையும் விரட்ட சிறந்த பொருள் இது தான்..!!!
ஹாய்…பிரண்ட்ஸ்.! இன்றைய வீட்டு குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது ஒரு சூப்பரான டிப்ஸ் தான். பொதுவாக இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை வீடு துடைப்பது தான். வீட்டை எப்போதும் துடைத்து துப்பரவாக வைத்திருத்தல் என்பது அவசியமும் கடமையும் தான். ஆனால் எத்தனை முறை துடைத்தாலும் இந்த எறும்பு, கொசு, போன்றவை வீட்டை விட்டு வெளியே போவதே இல்லை.
இதற்காக சந்தையில் இருக்கும் பல விதமான liguid பாவித்தாலும் எதற்கும் கொசுக்களும் எறும்புகளும் கட்டுப் படுவதில்லை. அத்துடன் குழந்தைகள் விளையாடும் இடங்களில் கிருமி தொல்லை வேறு.இதற்கு தீர்வு எம்மிடம் இருக்கிறது. அதாவது ஒரு ரூபா செலவின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வீட்டை துடைக்கலாம். எறும்பு, ஈ, கொசு, கிருமி இப்படி எதுவுமே வீட்டில் இருக்காது.
சரி இந்த பொருட்களை கலந்து இனி வீட்டை மொப் செய்யுங்கள். முதலில் ஒரு வாளி நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கரண்டி கல் உப்பு போடுங்கள். கல் உப்பு போடுவதால் கிருமிகள் அழிவது மட்டும் இன்றி எறும்பு, கொசு போன்றவை நெருங்காது.
அதனுடன் பச்சை கற்பூரம் ஒன்றை தூளாக்கி போடுங்கள் இவை இரண்டுடன் மஞ்சள் ஒரு தேக்கரண்டி மற்றும் வேப்பம் இலை இருந்தால் ஒரு பிடி எடுத்து மொப் செய்யப் போகும் நீரில் போடுங்கள். அவற்றை கலந்து மொப் செய்யுங்கள்.
இதனால் இதில் இருக்கும் அனைத்துமே கிருமி நாசினிகள் தான். மஞ்சள் உப்பு கற்பூரம் இவை தீய சக்திகளையும் விரட்டும் திறன் கொண்டது.அத்துடன் கற்பூரம் வீட்டிற்கு நறுமணத்தையும் தருகிறது. இது இயற்கை,இலகு, மட்டும் இன்றி ஆரோக்கியமானதும் கூட. முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்..!