கொடிய கொரோனா யாருக்கு அதிகம் தொற்றும்?
சீனாவில் ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் முகக்கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் மிக நெருங்கி உரையாடலை மேற்கொள்பவர்களுக்கு விரைவாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக ஜப்பானில் டோஹோ பல்கலைக்கழக பேராசிரியர் கசுஹிரோ ததேடா தெரிவித்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆய்வொன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.