கொடிய கொரோனா வைரஸ் நோயாளிகளை முழுமையாக சுகப்படுத்துவது எப்படி? குணமடைந்த நோயாளி வெளியிட்ட தகவல்!
ஸ்ரீலங்காவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடு நீர் மட்டுமே அதிகமாக கொடுக்கப்பட்டது என கொரோனா நோயில் இருந்து குணமடைந்த முதல் இலங்கையர் தெரிவித்துள்ளார்.
தனக்கு தினமும் 6 – 7 லீட்டர் சூடு நீர் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது நோயை குணப்படுத்துவதற்கு சுடு நீர் முக்கியமமாக காரணமாக அமைந்ததென மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை குணப்படுத்த சுடு நீர் மிக சிறந்த ஒன்றாகும் என தான் வைத்தியசாலையிலேயே தெரிந்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை கூறினார்.